இந்திய ராணுவ மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு: தயார் நிலையில் போர் விமானங்கள்
பெங்களூர்:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்தியாவின் முக்கிய ராணுவ மையங்களில்பாதுகாப்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்ட்டுள்ளன.
மேலும் இராணுவ மையங்கள், ராக்கெட், ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜன்சி என்ற விமானப்படை ஆராய்ச்சிமையம் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் கோட்டா ஹரிநாராயணன் கூறியதாவது:
தற்போது இந்த நிறுவனத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் அவ்வளவு எளிதாக உளளேநுழைய முடியாதபடி பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கிமான பல ரெக்கார்டுகளின் "டூப்ளிகேட்" பிரதிகள் எடுக்கப்பட்டு அவை ரகசியமான இடத்தில்வைக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் அடிக்கடி, "ஸ்கேன்" செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய உளவு நிறுவனத்தின் குழுக்களும் இந்த நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகிறது என்றார்.
போர்விமானங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் இயக்குநர் கே.கே. முத்தப்பாகூறும்போது:
நிறுவனத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்தப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் உள்ளே வருகின்ற மற்றும் வெளியே செல்கின்ற அனைத்து விமானங்களும் மத்திய தொழில்துறைபாதுகாப்புப்படை (சி.ஐ.எஸ்.எப்), ராணுவம் மற்றும் போலீசாரின் தீவிர சோனைக்குப் பிறகே அனுப்படுகின்றன.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் நம்மைப் போன்ற நாடுகளுக்கு ஒரு விழிப்புணர்ச்சியைஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
இந்த நிறுவனங்கள் தவிர ஏராளமான மத்திய மற்றும் மாநில அரசின் ஆராய்ச்சி மையங்கள், ராணுவப்பிரிவுகள்ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.