Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் உதவி மையங்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

அமெரிக்காவில் நடந்துள்ள தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள தங்கள் உறவினர்களை இந்தியர்கள்தொடர்புகொள்ள பெங்களூரில் சில உதவி மையங்களை கர்நாடக அரசு அமைத்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான உலக வர்த்தக மைய இரட்டைக் கட்டடத்தில் உள்ள ஏராளமான நிறுவனங்களில்ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.

இந்தியாவில் உள்ளவர்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலையைப் பற்றி அறியவிரும்புவார்கள். இதற்காக கர்நாடக அரசு பல உதவி மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து மனித வளமேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் சாந்தனு கான்சல் கூறியதாவது:

அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினரின் நிலைமை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த மையங்கள் உதவிசெய்யும். அவர்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினரின் பெயர், அவர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர்,விலாசம் மற்றும் இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை மையத்தில் கொடுக்க வேண்டும்.

இதை வைத்துக்கொண்டு நாங்கள் அங்குள்ள தகவல் தொடர்பு மையத்தில் தொடர்புகொண்டு, உங்களின்உறவினரைப் பற்றிய செய்திகளைத் தெரிவிப்போம்.

உங்களை நாங்கள் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வேண்டும் என்பதால், உங்களுடைய விலாசம்,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களையும் கொடுக்க வேண்டும்.

இந்த மையத்தின் தொலைபேசி எண்: 2253739. இதே எண்ணிலேயே பேக்ஸ் வசதியும் உள்ளது.

இ-மெயில்: [email protected]
இந்த மையங்கள் செப்டம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை செயல்படும் என்றார் சாந்தனு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+