12 கடத்தல்காரர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்:
உலகவர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளகடத்தல்காரர்களில், 12க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறைஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் யார் என்ற தேடுதல் வேட்டையில் அமெரிக்காவின் உளவுநிறுவனமான எப்.பி.ஐ. மற்றும் அந்நாட்டுப் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் எல்லைப்பகுதியில் புளோரிடா மாகனத்துக்குள்கடத்தல்காரர்கள் அத்துமீறி நுழைந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதையடுத்து புளோரிடா மற்றும் மஸாசூசெட்ஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள பல இடங்களை அதிகாரிகள்சோதனையிட்டனர். அந்தப் பகுதிகளில் போலி குடியேற்ற ஆவணங்களுடன் 12க்கும் மேற்பட்டோரை அவர்கள்கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் கடத்தல்காரர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று அறிய அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து எந்தத் தடயமும் சிக்கியதாகத் தகவல் இல்லை.
மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற கடத்தல்காரர்கள் 2 பேருக்கு அடைக்கலம் கொடுத்ததாக, ஒருகுடும்பத்தினரை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
தாக்குதலுக்கு காரணமான தீவிரவாத அமைப்பு எது என்ற உறுதியாத் தெரியாத நிலையில், பல தீவிரவாதக்குழுக்கள் இந்தத் தாக்குதலில் பங்கெடுத்திருக்கலாம் என்று எப்.பி.ஐ. அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications