ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது: அரசு வழக்கறிஞர்
டெல்லி:
மாநில முதல்வரை நியமிக்கும் விஷயத்தில் மாநில ஆளுநர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார்.
புதன்கிழமை தமிழக அரசின் சார்பாக முத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் வாதாடினார்.
"மாநில ஆளுநர் எடுக்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை அரசியல் சட்டத்தின் 361வதுபிரிவு தெளிவாக விளக்கியுள்ளது. எனவே தமிழக ஆளுனராக இருந்த பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்குமுதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி அவர்வாதாடினார்.
நீதிபதிகள் கேள்வி
"ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தால் கூட கட்டுப்படுத்த முடியாத எல்லைகள் கொண்டதா?
அரசியல் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்படாதா யாரை வேண்டுமானாலும் முதல்வராக ஆளுநர் நியமிக்கலாமா?
மன நோயாளி ஒருவரையோ, திவால் ஆனவரையோ அல்லது 25 வயதுக்கு உட்பட்டவரையோ, அயல் நாட்டைச்சேர்ந்தவரையோ கூட முதல்வராக நியமிக்கலாம் என்று கூறுகிறீர்களா?"
இவ்வாறு நீபதிகள் ஜி.பி.பட்நாயக், எஸ்.கே. சபர்வால், ரூமாபால், பிரிஜேஷ் குமார் ஆகியோர் அரசுவழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
பி.பி.ராவ் பதில் வாதம்
இதற்கு பதிலளித்து பி.பி.ராவ் தன் வாதத்தில் கூறியதாவது:
அது கூட சாத்தியமானதுதான். இந்த விஷயத்தில் ஆளுநர் எடுக்கும் நடவடிக்கை குறித்து மாநில சட்டசபையும்,மக்களும்தான் தீர்ப்பு கூற முடியும்.
தனது நடவடிக்கை குறித்து நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற ஆளுநருக்கு அரசியல் சட்டத்தில்கூறப்படவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு வரமுடியாத ஆளுநரின் நடவடிக்கைள் குறித்து விமர்சிப்பதுசரியானதல்ல.
ஆளுநரால் முதல்வராக நியமிக்கப்படுபவர், சட்டசபையின் நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும்என்றுதான் ஆரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது எழுந்துள்ளது போல் பிரச்சனை எழும்போது அதற்கு நீதிமன்றம் மூலமாக இல்லாமல் சட்டசபைமூலமாாகவே தீர்வு காணலாம் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆளுநர் எடுத்த நடவடிக்கை சரியானதா, இல்லையா என்பதை மக்களும், சட்டசபையும்தான் முடிவு செய்யவேண்டும்.
தேர்தலில் பெரும்பான்மை பெற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக ஜெயலலிதாவை முதல்வராகதேர்ந்தெடுத்தார்கள்.அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அவரது இந்த நடவடிக்கை அரசியல்சட்டத்திற்கு எதிரானது அல்ல.
ஜனநாயகத்தில் மக்கள் வழங்கும் தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது அரசியல் சட்டத்தின் கீழ் செயல்படும்ஆளுனரின் கடமை.
5 ஆண்டு காலம் ஆட்சி நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால்அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுனரின் கடமை.
சட்டசபையின் உறுப்பினராக இல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்கலாம். ஆனால் அவர் 6 மாத காலத்திற்குள்சட்டமன்ற உறுப்பினராக ஆனால் மட்டுமே தொடர்து பதவியில் நீடிக்க முடியும் என்று அரசியல் சட்டத்தின் 164(4)வது பிரிவு கூறுகிறது.
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதாஉயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்யப்பட்டால் அந்தநடவடிக்கை நியாயமற்றதாக இருக்கும் என்று வாதாடினார்.












Click it and Unblock the Notifications