மதுரை உயர்நீதிமன்ற கிளை எப்போது செயல்படும்?
சென்னை:
மதுரையில் உயர்நீதிமன்றக்கிளை அமைக்கும் பணிக்கான முதல் கட்ட நிதியாக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்று மாநில சட்டம் மற்றும் நிதியமைச்சரான பொன்னையன் கூறியுள்ளார்.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் பொன்னையன், "மதுரை செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில்உயர்நீதிமன்றம் செயல்படுவதற்குரிய வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே புதிய கட்டடம் கட்ட முடிவுசெய்யப்பட்டது.
முந்தைய ஆட்சிக்காலத்தில் மொத்தத் திட்டப் பணிகளுக்கு ரூ.56.46 கோடி செலவாகும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்களது ஆட்சி வந்தபிறகு இந்த செலவு ரூ.36.36 கோடி மட்டுமே ஆகும் என்றுபொறியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவும் ரூ.12 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.மற்றபடி திட்டச் செலவை அரசு குறைக்கவில்லை.
முதல் கட்டப் பணிகள் முடிந்தவுடன் உயர்நீதிமன்றக் கிளை எப்போது முதல் செயல்படுவது என்பதை உயர்நீதிமன்றதலைமை நீதிபதியுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும்" என்றார் அமைச்சர் பொன்னையன்.