ஜெ. அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும் - அட்டர்னி ஜெனரல்
டெல்லி:
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரால்தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல்சோலி சொராப்ஜி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை (செப்.5) நடந்த வாதத்தின்போது, நீதிபதிகள் பெஞ்ச் சராமாரியாகக் கேள்விக் கணைகளைவீசியது. அன்று நடந்த வாதத்தின் விவரம்:
சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வே வாதம்
சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வே மத்திய அரசின் சார்பாக ஆஜராகி வாதாடினார். ஜெயலலிதா முதல்வராகபதவி வகிக்ககூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆதரித்து அவர் வாதாடினார். அவர் தன் வாதத்தில்,
அரசியல் சட்டத்தின்படி ஒருவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இருக்கும் போது அவர்முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ பதவி வகிக்கும் தகுதியையும் இழந்தரவராகிறார். அப்படிப்பட்டஒருவர் அமைச்சராகவோ அல்லது முதல்வராகவோ பதவி வகிப்பது சட்டத்திற்கு புறம்பானது.
அரசியல் சட்டம் 164 (4) பிரிவு எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவரை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்க 6 மாத காலஅவகாசம் கொடுத்துள்ளது. அந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது அவர் பதவியில் தொடர்வதற்குமக்களால் எம்.எல்.ஏவாகதேர்ந்தெடுக்கப் படுவதற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் தான்.
தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர் தனது தகுதியின்மையை போக்கிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட காலஅவகாசம் அல்ல என்றார் சால்வே.
நீதிபதிகளின் கேள்விக் கணைகள்
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், சராமாரியாகக்கேள்விக் கணைகளை அனுப்பியது. அவை:
ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்ககூடாது என்று தீர்ப்பளித்தால் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின்நிலை என்ன?
அரசு இதுவரை செயல்படுத்திய திட்டங்கள், செயல்படுத்தவுள்ள திட்டங்களின் நிலை என்ன?
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு உண்டு என்றால் அது என்ன?
ஜெயலலிதா முதல்வராக பதவியில் தொடர்வதை தடை செய்தால், அந்தத் தடை நீக்கப்படும் காலம் வரையிலானஇடைக்காலத்தில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?
இதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன?
இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிகால அவகாசம் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications