இதுவரை 82 உடல்கள் மீட்பு: 5 பேர் தான் உயிருடன் மீட்பு
நியூயார்க்:
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய விமானத்தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கிப் பலியானவர்களில் 82 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் 9 பேர் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. ஆனால் 5 பேர் தான்இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
இரவு பகல் பாராது தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
நியூயார்க் நகரத்தில் 8 மீட்புக் குழுக்களும், வாஷிங்டன் நகரத்தில் 4 மீட்புக் குழுக்களும், இந்த மீட்புப் பணியில்ஈடுபட்டுவருகின்றன.
மேலும் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் ரத்த தானம் செய்துவருகின்றனர்.
பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் மற்றும் இஸ்ரேல் அதிபர் போன்ற உலக நாடுகளின் தலைவர்களும் ரத்த தானம்செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications