சொத்து விவரங்களைத் தெரிவிக்க ஸ்டாலினுக்கு கமிஷனர் நோட்டீஸ்
சென்னை:
சொத்து விவரங்களை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின்மற்றும் 155 உறுப்பினர்களுக்கு, கமிஷனர் ஆச்சார்யலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் சென்னை மாநாகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கடந்த 5 ஆண்டுகளில் 20 உறுப்பினர்கள்மட்டுமே தங்களின் சொத்து மதிப்புகளைக் காட்டியுள்ளனர்.
மேயர் ஸ்டாலின் மற்றும் 155 உறுப்பினர்கள் இதுவரை சொத்து விவரத்தைக் காட்ட முன்வரவில்லை.
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஸ்டாலினின் சொத்து விவரம் குறித்து ஒரு பொது நல வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது ஸ்டாலின் தனது சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து மற்ற உறுப்பினர்கள் அனைவரும் சொத்து விவரங்களைக் காட்ட வேண்டும் என்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.
ஆனால் 20 உறுப்பினர்கள் தான் அப்போது தங்கள் சொத்துமதிப்புகளைக் காட்டினார்கள். எஞ்சிய 155 பேரும்இதுவரை சொத்து விவரங்களைக் காட்டவில்லை.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 24ம் திேதியுடன் இந்த அனைத்து உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது.தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநாகராட்சி மேயர் ஸ்டாலின் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும், மாநகராட்சிக் கமிஷனர்ஆசசார்யலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் ஒரு வார காலத்திற்குள் அனைவரும் தங்கள் சொத்து மதிப்புகளைக் காட்ட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.