நாளை வாஜ்பாய் தொலைக்காட்சியில் பேச்சு
டெல்லி:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலையடுத்து இந்திய மக்களிடையே தொலைக்காட்சியில்பிரதமர் வாஜ்பாய் நாளை உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வியாழக்கிழமையும் வாஜ்பாய்தலைமையில் இந்திய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டிக் கூட்டம் 45 நிமிடம் நடந்தது. அமெரிக்கா மீதானதாக்குதலுக்குப் பின் இரண்டாவது முறையாக இந்தக் கமிட்டிக் கூட்டம் நடந்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்,
கூட்டத்தில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து பெட்ரோல் உள்ளிட்ட பல இறக்குமதிப் பொருள்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது.இதை சமாளிப்பது குறித்தும் விவாதித்தோம்.
அமெரிக்கா மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைள் குறித்து மக்களிடையே வாஜ்பாய்வெள்ளிக்கிழமை உரையாற்றுவார் என்றார் சிங்.












Click it and Unblock the Notifications