அமெரிக்க-இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் நிலவி வரும் சூழ்நிலைகுறித்து, இந்திய பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவும், அமெரிக்க அதிபரின்பாதுகாப்பு ஆலோசகர் கொன்டோலீசா ரைசும் விவாதித்தனர்.
இதனால் தற்போது தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் வேதனை இந்தியாவுக்குப்புரியும் என்ற பொதுவான கருத்து நிலவிவருகிறது.
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து தீவிரவாதத்தை அடியோடு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த 2 நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications