தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்நேற்று (வெள்ளிக்கிழமை) முடிவடைந்தது. சட்டசபை கூட்டத்தொடர் மறு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து 16ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக இருந்த பட்ஜெட் 18ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பென்னையன்சமர்ப்பித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 32 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. மாலை நேரங்களிலும்சட்டசபை நடந்தது.
இந்த கூட்டத்தொடரில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து 5 நாட்கள் விவாதம்நடந்தது.
32 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் 152 மணி நேரம் 30 நிமிடம்நடைபெற்றது.51 உறுப்பினர்கள் 16 மணி நேரம் 23 நிமிடங்கள் பேசினர்.
ஒவ்வொரு சட்டசபையின் கூட்டத்தொடரின் இறுதியில், சட்டசபையில் நடந்தநிகழ்ச்சிகள், சட்டசபைக்கு தவறாமல் வந்த உறுப்பினரின் பெயர்கள், உறுப்பினர்கள்கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை, சபை நடந்த நேரம் ஆகியவை குறித்து தெரிவிக்கவேண்டும் என்று பா.ம.க. உறுப்பினர் கணேசன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்த விவரங்கள் தற்போது இல்லை. பின்னர் தெரிவிப்பதாக சபாநாயகர்காளிமுத்து தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த பதில் தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கணேசன் கூறினார்.சட்டசபையின் நடவடிக்கைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று கணேசன்வருத்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications