மதுரையில் மண்சரிந்து 3 தொழிலாளர்கள் உயிருடன் புதைந்து மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அனுப்பானடி பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த3 தொழிலாளிகள் மண் சரிந்து விழுந்ததால் உயிருடன் புதையுண்டு இறந்துபோனார்கள்.
அதற்காக மணலைத் தோண்டி கோபுரம் போல் குழிக்கு வெளியே குவித்துவைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீடீரென மண் சரிந்து விழுந்தது. குழிக்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்மணலுக்குள் சிக்கினர். இதில் 3 பேர் உயிருடன் புதையுண்டு இறந்து போனார்கள்.
மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இறந்து போனவர்களின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications