மேயர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஸ்டாலின்
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று சென்னை நகரமேயர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சென்னைநகர மேயர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமைசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நான்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று என் சார்பாக பல தொண்டர்கள் மனுத்தாக்கல்செய்துள்ளனர்.
ஆனால் எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை. நான்போட்டியிடுவதாக இருந்திருந்தால் நானே மனு தாக்கல் செய்திருப்பேன்.
கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் எனக்கு முழு திருப்தி அளித்துள்ளது.கடந்த சில மாதங்களில் அதிகாரிகள் மேலும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் மேலும்பல நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பேன் என்று கூறினார்.
இது குறித்து கருணாநிதி கூறியதாவது:
ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று என்னிடமும்,பொதுச் செயலாளரிடமும் தெரிவித்துவிட்டார்.
மேயர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கட்சி முடிவுசெய்யும் என்று கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications