ஆப்கன் மீது போர் கூடாது - சதாம் ஹூசைன்
பாக்தாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடாது என்று இராக் அதிபர் சதாம் ஹூசைன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவும், சில மேற்கத்திய நாடுகளும் எந்தத் தாக்குதலுக்கும் அஞ்சப் போவதில்லை என்று அனைவருக்கும்தெரியும்.
நினைத்த மாத்திரத்தில், அவர்களும் "நேட்டோ" படைகளும் உலகின் எங்கு வேண்டுமானாலும் தங்கள் படைகளைத்திரட்டி, நிறுத்த முடியும். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
ஆனால், முஸ்லிம் நாடுகளிலும் மற்ற சில நாடுகளிலும் அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல்களை மக்கள் கொஞ்சம்நினைத்துப் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு முன், தற்போது நடந்துள்ள தாக்குதல்களால்கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை கொஞ்சமே.
1990 வளைகுடாப் போரில்கூட 15 லட்சம் இராக்கியர்கள் கொல்லப்பட்டதையும் இங்கு நான் கண்டிப்பாக சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
அதனால், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கட்டாயம் போர் தொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சதாம்.