ஆப்கானிஸ்தான் விரைந்தது பாகிஸ்தான் தூதுக்குழு: ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க கோரிக்கை
காபூல்:
ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடுமாறு பாகிஸ்தான் தூதுக்குழு ஆப்கானிஸ்தான் தலிபான்ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் நெருக்குதலின்பேரில் தான் இந்தக் குழுவை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. பின் லேடனைஒப்படைத்துவிட்டால் அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பிவிடலாம் என ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களிடம்பாகிஸ்தான் தூதுக்குழு கூறுகிறது.
ஆனால், ஒசாமாவை ஒப்படைக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
அமெரிக்காவுக்கு வான் பகுதியையும், விமானத் தளங்களையும் கொடுத்து பாகிஸ்தான் உதவினாலும் கூட தொடர்ந்துஎங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாக உதவும் என தலிபான்கள் நம்புகின்றனர்.
ஆப்கானிஸ்தான் வந்துள்ள தூதுக்குழுவில் ராணுவ அதிகாரிகள், மதத் தலைவர்கள், ஆப்கான் ஆதரவு அரசியல் கட்சித்தலைவர்கள், பாகிஸ்தான் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications