ஆப்கான் வான் பகுதி மூடல்: விமானங்கள் பறக்கத் தடை
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் வான் பகுதி மூடப்படுவதாக தலிபான் அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் எந்த விமானமும் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
எந்த நாட்டின் போர் விமானமும், பயணிகள் விமானமும், சரக்கு விமானமும், ஹெலிகாப்டர்களும் ஆப்கானிஸ்தான்வான் பகுதியில் நுழையக் கூடாது என தலிபான் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் காப்புக் குழுவைச்சேர்ந்தவர்களையும் சமூக சேவை அமைப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அவர்கள் சாலை வழியாகத்தான் பாகிஸ்தான் அல்லது ஈரானை சென்றடைய வேண்டும்.












Click it and Unblock the Notifications