கட்சியாக மாறியது சிதம்பரத்தின் அமைப்பு
சென்னை:
ப.சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற பெயரில்புதிய அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
த.மா.கா. ஜனநாயகப் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விஜய சேஷமஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ப. சிதம்பரம் தலைமை வகித்தார்.பேரவை எம்.எல்.ஏக்களான புரசைவாக்கம் ரங்கநாதன், வள்ளல் பெருமான் ஆகியோர் உள்ளிட்ட அனைவரும்கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின்போது த.மாகா. ஜனநாயகப் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து கட்சியின் பெயராக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. கட்சியின்பொதுச் செயலாளராக ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்திற்குப் பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சியாக மாறியுள்ளதன் மூலம்எங்களதுபொறுப்பு அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் இதுவரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியைத்தான்பார்த்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களத்தில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்பநாங்கள் யற்சிப்போம்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப எங்களது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் கூட்டணிவைத்துக் கொள்வோம். எந்த அரசியல் கட்சியையும் நாங்கள் பகையாளியாக பார்ப்பது இல்லை. அனைத்துஅரசியல் தலைவர்களும் எங்களுக்கு நண்பர்களே என்றார் சிதம்பரம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் சிவாஜி கணேசன், மூப்பனார் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications