ஐரோப்பிய நாடாளுமன்றத்தை விஷ வாயுவால் தாக்க முயன்ற லேடன்
லண்டன்:
கடந்த பிப்ரவரி மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தாக்குவதற்கு பின் லேடன் திட்டமிட்டதாகவும், ஜெர்மன்போலீசார் அத்திட்டத்தை முறியடித்ததாகவும் பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று தெரிவிக்கிறது.
இதற்கான செலவு முழுவதையும் பின் லேடன்தான் ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தை "செரின் நெர்வ் கேஸ்" மூலம் தாக்கி, அங்கிருக்கும் 625 எம்.பிக்களையும்கொல்வதற்கு பின் லேடன் திட்டமிட்டு, இந்தத் தீவிரவாதிகளை அனுப்பினார்.
ஆனால், பிராங்பர்ட்டில் நடந்த அதிரடிச் சோதனையில், ஜெர்மன் போலீசாரிடம் 6 தீவிரவாதிகள் மாட்டிக்கொண்டனர். ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தாக்க அவர்கள் திட்டமிட்டது அப்போதுதான் போலீசாருக்குத்தெரிய வந்தது.
பிரிட்டிஷ் அரசின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் (நம்மூர் "தடா" சட்டம் போன்றது) கீழ் கைது செய்யப்பட்ட அந்த6 பேரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்துகண்காணிப்பதற்காகவே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications