பாகிஸ்தானின் காஷ்மீர் நிபந்தனை: இந்தியா கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த உதவ வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடவேண்டும் என்ற பாகிஸ்தானின் நிபந்தனைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது நாடு எதையும் தலையிட அனுமதிப்பதில்லை என்பது தான் இந்தியாவின்நிலையாக இருந்து வருகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானின் நிபந்தனை குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கூறுகையில்,
பாகிஸ்தானின் கோரிக்கை முட்டாள்தனமானது. தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவதை விட்டுவிட்டுஎதையெதையோ பாகிஸ்தான் பேசி வருகிறது என்றார்.
பின்னர் அமெரிக்க தூதரகத்துச் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி புத்தகத்தில் கையெழுத்திட்டார்.












Click it and Unblock the Notifications