காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்கி 11 போலீசார் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு -காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே உள்ள போலீஸ் முகாம் மீது தீவிரவாதிகள்நடத்திய தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.
எல்லை பகுதியான குப்வாரா மாவட்டதிற்கு அருகே உள்ளது ஹன்ட்வாரா. இங்குதீவிரவாதிகளுக்கு எதிரான சிறப்பு அதிரடிபடை போலீஸ் முகாம் ஒன்று உள்ளது. இந்தமுகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர். 9 பேர்காயமடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லக்ஷர்-இ-தொய்பாதீவிரவாத இயக்கத்தின் தற்கொலை படையினர் ஹன்ட்வாரா போலீஸ் முகாம் மீது கையெறிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் கண்மூடித்தனமாக தாக்குதல்நடத்தினர்.
போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர். 3உதவி சப் -இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர்காயமடைந்தனர்.
இந்த சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அபு உஸ்மான் என்ற தீவிரவாதியும்கொல்லப்பட்டான்.