நடுக்கடலில் புலிகள் தாக்குதலில் 15 வீரர்கள் பலி: பலரைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது விடுதலைப் புலிகள் நடுக்கடலில் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள்பலியாகியுள்ளனர். மேலும் பல வீரர்களைக் காணவில்லை.
இதில் 15 வீரர்கள் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த கடலோர காவல்படையின் 2 விரைவுப் படகுகளையும் புலிகள் தாக்கினர்.இதில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீரர்களைக் காணவில்லை. இவர்கள் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
வெடிகுண்டுகளுடன் வந்து கப்பல் மீது மோத இருந்த படகுகளை ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி தகர்த்தனர். இதில் 10கரும் புலிகள் இறந்தனர்.












Click it and Unblock the Notifications