For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலகங்காவுக்கு சென்னை மேயர் பதவி டிக்கெட்: ஜெ. வழங்கியது ஏன்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள பாலகங்காவுக்கு மேயர் தேர்தலில் டிக்கெட் கிடைத்தது குறித்து பல்வேறுதகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளன.

மத்திய சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளவர் பாலகங்கா. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் இவருக்கு டிக்கெட்கிடைத்தது, அதிமுக தொண்டர்களே எதிர்பாராதது என்று கூறப்படுகிறது.

சுலோச்சனா சம்பத் உள்ளிட்ட பலருடைய பெயர்கள் மேயர் பதவிக்கு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாலகங்காவின் பெயர்அறிவிக்கப்பட்டது பல அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், பாலகங்காவுக்கு டிக்கெட் கொடுத்ததன் பின்னணி குறித்து ஒரு தகவல் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. நடந்து டிந்தராஜ்யசபா தேர்தலில் பாலகங்காவுக்கு டிக்கெட் தருவதாக முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தாராம். ஆனால் கூறியபடிடிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் பாலகங்கா ஏமாற்றத்தில் ஆழ்ந்தார்.

இதையடுத்து பாலகங்காவைக் கூப்பிட்ட முதல்வர், ஏமாற்றம் அடைய வேண்டாம். இதை விட கெளவரமான பதவியைத் தருகிறேன்.பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறியிருந்தாராம். அதை மனதில் வைத்தே இப்போது மேயர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புஅளித்துள்ளாராம்.

எம்.பி பதவியை விட மேயர் பதவியே மேலானது என்ற மன நிலையில் இப்போது பாலகங்கா உள்ளாராம். மேலும், பெருமைமிக்கசென்னை மேயர் பதவிக்கு தன்னை போட்டியிட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதன் மூலம் இன்ப அதிர்ச்சியிலும் பாலகங்கா உள்ளாராம்.

தனக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தவுடன் குடும்பத்துடன் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசியும்வாங்கினார் பாலகங்கா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X