ஆப்கன் மீது போர் விமானங்கள் குண்டு மழை
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீது ஞாயிற்றுக்கிழமை திடீரென்று விமானத் தாக்குதல் நடைபெற்றது. ஆப்கனின் முக்கிய ராணுவத் தளவாடங்கள் மீது குண்டு மழை பொழிந்தன சில போர் விமானங்கள்.
ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க ஆப்கனின் தலிபான் அரசு மறுத்ததை அடுத்து, அந்நாட்டைத் தாக்குவதற்கானஅனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா எடுத்து விட்டது.
இன்னும் 3 நாட்களுக்குள் பின் லேடன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், நிச்சயம் தாக்குதல்நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
தலிபான் அரசும், இந்தப் புனிதப் போருக்குத் தயார் என்று கூறி, அமெரிக்காவின் தாக்குதலை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென்று சில போர் விமானங்கள் ஆப்கனின் முக்கிய ராணுவத் தளவாடங்கள்மீது குண்டு மழை பொழிந்தன. இதில், அத்தளத்தின் முக்கியப் பகுதிகளும், பல பலமாடிக் கட்டடங்களும் பலத்தசேதமடைந்தன.
ஆனால், இந்தத் தாக்குதலை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications