பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துவிட ஐரோப்பிய தூதர்கள் திட்டம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கவுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஐரோப்பிய நாட்டு தூதர்கள் இந்தியவிசாக்கள் கேட்டு விண்ணப்பங்கள் செய்துள்ளனர்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தூதரகத்தில் உள்ள பிற ஊழியர்களின் குடும்பங்களுக்கும் இந்தத்தூதர்கள் இந்தியாவிடம் விசா வழங்குமாறு கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால் பாகிஸ்தானில் உள்ள ஐரோப்பியர்கள் மீது அங்குள்ள இஸ்லாமியதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து ஐரோப்பிய தூதரகங்களுக்கு பாகிஸ்தான்ராணுவம் பாதுகாப்பு அளித்துள்ளது.

ஆனால், இந்தப் பாதுகாப்பை எல்லாம் நம்பியிருக்க ஐரோப்பிய நாட்டுத் தூதர்கள் தயாராக இல்லை.பாகிஸ்தானுக்குள் பிரச்சனை ஏற்பட்டவுடனேயே அங்கிருந்து வெளியேறி உடனடியாக இந்தியாவுக்குள்தற்காலிகமாகக் குடியேறிவிட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை ஸ்வீடன், பெல்ஜியம், நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் ஏற்கனவே இந்திய விசாக்களைபெற்றுவிட்டனர். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் விசாக்களைக் கேட்டுவிண்ணப்பித்துள்ளனர்.

தங்களுடன் தங்கள் வாகனங்களையும் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அரசிடம் இந்தத் தூதர்கள்அனுமதி கோரியுள்ளனர். வாக் எல்லை வழியாக கார்களிலேயே இந்தியா வந்துவிட அவர்கள் நினைக்கின்றனர்.

பாகிஸ்தானில் ஆப்கான் எல்லைப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான், வடமேற்கு எல்லைப் பகுதி மாகாணம், வடக்குமாகாணத்தில் உள்ள பிரிட்டஷ் நாட்டைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறுஇங்கிலாந்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+