தமிழகத்தில் மழையோ மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்மேற்குப் பருவக் காற்று வலுவடைந்ததை அடுதது, தமிழகம் முழுவதிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தென் மேற்குப் பருவ மழை தமிழகத்தில் வலுத்துவருகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் சில நாட்களாகவேநல்ல மழை பெய்துள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு நிலைபாதிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை நகரில் காலையில் லேசானமழை பெய்தது. தொடர்ந்து தூறல் போட்டுக் கொண்டுள்ளது.
இதனால் வெப்பம் முற்றிலும் தணிந்து பெங்களூர் போல குளுகுளு நகராக மாறியுள்ளது சென்னை.
திருச்சி நகரிலும் காலை முதல் தூறல் விழுந்து கொண்டே உள்ளது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் மழைபெய்துள்ளது.
இந்த மழை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications