காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை: கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லைஎன கர்நாடக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் குறுவை சாகுபடி பயிர்கள் வாடி வருவதால் உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழகம் கோரியது.ஆனால், தங்கள் மாநிலத்திலேயே வறட்சி நிலவுவதால் தண்ணீர் தர முடியாது என கர்நாடகம் கூறிவிட்டது.

இதையடுத்து காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என தமிழகம் கோரியது. காவிரியில் நீர் விடக் கோரிஉச்ச நீதிமன்றத்திலும் தமிழகம் வழக்குத் தாக்கல் செய்தது.

இதைத் தொடர்ந்து காவிரி ஆணையக் கூட்டம் கடந்த வாரம் கூட்டப்பட்டது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் மாற்றம்ஏற்பட்டதையடுத்து இக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரில் நீரின் அளவுஅதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்து வருவதால் உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டியதில்லை என கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா கூறியுள்ளார்.

கிருஷ்ணா பேட்டி:

வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழகத்திலும் கர்நாடகத்திலும் நல்ல மழை பெய்து வருவதால் காவிரிப் பிரச்சனையில் இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்கமுடியும் என நம்புகிறோம்.

மழை பெய்து வருவதால் இப்போது காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்ட வேண்டியது அவசியம் தானா என்பது குறித்து பிரதமர்யோசிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+