For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க தலைவரை பேச அழைக்கவில்லை: தாலிபான்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாலிபான் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாக அமெரிக்க மனித உரிமைப்பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் கூறியிருந்த போதிலும், தாங்கள் தாங்கள் அவரைஅழைக்கவில்லை என்று தலிபான் அரசு மறுத்துள்ளது.

புதன்கிழமை தனக்கு அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில், தலிபான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக ஜாக்சன்கூறியுள்ளார்.

"என்னுடைய பேச்சுவார்த்தையால், அப்பாவி ஆப்கன் மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்றால், அதற்குநான் தயார்" என்று ஜாக்சன் கூறியுள்ளார்.

ஆனாலும், தலிபான்களின் அழைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைப் பற்றி அவர் இன்னும் முடிவுசெய்யவில்லை.

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஆப்கனுக்கு ஜாக்சன் செல்வதற்கு அமெரிக்காவும் தடை ஒன்றம்விதிக்கவில்லை. இனி பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஜாக்சன் செல்வதற்கு மறுப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை என்றாலும், அமெரிக்கா இதை விரும்பவில்லை என்றேதெரிகிறது.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜாக்சனை தாங்கள் அழைக்கவே இல்லை என்று தலிபான் அரசுஅடித்துக் கூறியுள்ளது.

ஆனாலும், "தற்போதுள்ள பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக ஜாக்சன் வருகிறார் என்றால், நாங்கள் நிச்சயம்அவரை வரவேற்போம்" என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

ஆனால், ஜாக்சன் இப்போதைக்குள் ஆப்கன் செல்லும் நிலையில் இல்லை. "ஆப்கன் செல்வதை நான்விரும்பவில்லை. இப்போதைக்கு ஆப்கன் செல்லும் திட்டமே இல்லை" என்று கூறியுள்ளார் ஜாக்சன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X