"பின் லேடன் ஆப்கானில்தான் இருக்கிறார்"
காபூல்:
பின் லேடன் இன்னும் ஆப்கானில் தான் இருக்கிறார் என்று தலிபான்களுக்கு எதிரான இயக்கமான நார்தர்ன்அல்லையன்ஸ் அமைப்பின் பிரதிநிதி கூறியுள்ளார்.
தலிபான்களுக்கு ஆதரவாக பின் லேடன் செயல்பட்டு வருகிறார். இவருடைய ஆட்கள்தான் கடந்த 9ம் தேதிநார்தர்ன் அல்லையன்ஸ் தலைவர் அகமது ஷா மசூதை கொலை செய்தார்கள்.
இதற்கிடையில் பின் லேடனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா தலிபான்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் லேடன்ஆப்கானைவிட்டு வெளியேறிவிட்டார் என்று தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் நார்தர்ன் அல்லையன்ஸ் அதைதிட்டவட்டமாக மறுக்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதியும், முன்னாள் யுனெஸ்கோ தூதருமான தாவூத்மிர் கூறுகையில்:
எங்களுக்கு கடைசியாக கிடைத்த தகவலின்படி தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இன்னும் ஆப்கானிஸ்தானில்தான்இருக்கிறார். ஆனால் தலிபான்கள் , பின்லேடன் ஆப்கானைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள்.தலிபான்கள்தான் லேடனை மறைத்துவைத்துள்ளனர் என்றார் அவர்.