தமிழக சிறையில் இருந்த 13 இலங்கை மீனவர்கள் விடுதலை
மதுரை:
இந்திய கடற் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்டஇலங்கையைச் சேர்ந்த 13 மீனவர்கள் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பகுதியில் மீன் பிடித்தால் அவர்களை இலங்கைகடற்படை கைது செய்து சிறையில் அடைக்கும். அதே போல் இலங்கை மீனவர்கள்இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்தால் அவர்களை இந்திய கடலோர காவல்படை கைதுசெய்து தமிழக சிறையில் அடைக்கும்.
இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடல் பகுதியில் அத்து மீறி நுழைந்துமீன்பிடித்ததால், இலங்கையைச் சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு மதுரைசிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அரசு கைது செய்யப்பட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுமத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்டிருந்த 23 இலங்கை மீனவர்களில் 13 பேரைவிடுதலை செய்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து இவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தூத்துக்குடிக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தமோட்டார் படகும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இலங்கைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications