நாகர்கோவில் அருகே அமைச்சரை "கெரோ" செய்த அதிமுகவினர்
நாகர்கோவில்:
கொளச்சல் நகராட்சி வேட்பாளரை மாற்றக் கோரி, பொதுப்பணித் துறை அமைச்சர் தளவாய் சுந்தரத்தை அதிமுகதொண்டர்கள் கெரோ செய்தனர்.
கொளச்சல் நகராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அமீன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆனால் இவர் மீது அப்பகுதி அதிமுகவினருக்கு நல்ல பெயர் இல்லை.
இந்நிலையில், தளவாய் சுந்தரம் உள்பட பல அதிமுக தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்வதற்காகஅமீன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் ஒரு பிரிவினர் அமைச்சரை வழி மறித்து, அமீனை மாற்றிவிட்டுவேறு ஒரு ஆளை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரினர்.
மேலும் அமீனை மனுதாக்கல் செய்யவும் அவர்கள் விடவில்லை.
இதையடுத்து அதிமுக தலைமையிடம் இதுபற்றி எடுத்துரைத்து வேறு ஒரு வேட்பாளரை அறிவிக்க ஏற்பாடுசெய்வதாகக் கூறி அமைச்சர், அவர்களைச் சமாதானப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications