For Daily Alerts
Just In
தூத்துக்குடி நகராட்சித் தலைவர் ராஜினாமா
தூத்துக்குடி:
தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத கோபத்தில் தூத்துக்குடி தூத்துக்குடி நகராட்சி தலைவர்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி நகராட்சித் தலைவராக இருப்பவர் ஹென்றி. இவர் அதிமுகவைச்சேர்ந்தவர். இந்த தேர்தலில் தனக்கே மீண்டும் சீட் கிடைக்கும் என அவர்நினைத்திருந்தார். ஆனால் தூத்துக்குடி நகராட்சித் தலைவர் பதவி தமிழ் மாநிலகாங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ஹென்றி கட்சியிலிருந்து விலகினார். பின்னர் காங்கிரஸில்சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ்வேட்பாளரைஎதிர்த்து போட்டியிடுகிறார்.
ஹென்றியின் திடீர் முடிவினால் தூத்துக்குடி அதிமுக வட்டாரம் அதிர்ச்சியில்மூழ்கியுள்ளது.
Story first published: Monday, October 1, 2001, 5:30 [IST]