For Daily Alerts
Just In
தமிழக கடலோரங்களில் நல்ல மழை
சென்னை:
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழகத்தின் உட் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும்என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் 4 செமீ மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கத்தில் 2 செமீ மழை பெய்துள்ளது.சோழவரம், பூண்டி ஆகிய பகுதிகளில் 1 செமீ மழை பெய்துள்ளது.
வட தமிழகம் மற்றும் கடலோரப்பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்தாலும் கூட மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தின் சிலபகுதிகளில் சுத்தமாக மழை இல்லை. நல்ல வெயில் அடித்து வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பல இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்று வானிலைஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Story first published: Tuesday, October 2, 2001, 5:30 [IST]