பாண்டிச்சேரி அரசுக்கு ஆபத்து இல்லை: காங். தலைவர்
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அம் மாநிலகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னைக்கு வந்த காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதி ரமேஷ் சென்னிதாலாவை வரவேற்றபிறகு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முதல்வர் சண்முகம் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எந்தவித பிரச்சினையும்இல்லை. அவர் தேர்தலில் நிற்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடையே கருத்து வேறுபாடுஎதுவும் கிடையாது.
கண்டிப்பாக அவர் தேர்தலில் நிற்பார், எந்தத் தொகுதி என்பதை அவர் முடிவு செய்துஎங்களிடம் கூறிய பிறகு அதுகுறித்து மேலிடத்தில் தெரிவிக்கப்பட்டு முடிவுஎடுக்கப்படும். அவரது ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
தமிழகத்தில் காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் இல்லை. ஆனால் பாண்டிச்சேரியில்அதிமுக எங்களுடன்தான் உள்ளது. எனவே பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதபிரச்சினையும் இல்லை.
இன்னும் 15 நாட்களில் பாண்டிச்சேரி அரசியலில் மாற்றம் வரும் என்று பாண்டிச்சேரிமக்கள் காங்கிரஸ் தலைவர் கண்ணன் கூறியிருப்பது எதைக் குறித்து என்றுதெரியவில்லை.
என்ன வகையான மாற்றம் வரும் என்பதை அவர்தான் விளக்க வேண்டும். அவரதுகருத்து குறித்து எங்களுக்குக் கவலையில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications