For Daily Alerts
Just In
ஆளுரைச் சந்தித்த பின் பாண்டிச்சேரி முதல்வருக்கு உடல் நலக்குறைவு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்கத்திற்கு திடீர் உடல்நலக்குறை ஏற்பட்டது.இதையடுத்து அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரியில் அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. முதல்வர் சண்முகத்தின்பதவிக்கு ஆபத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளுநர்ரஜினிராயை முதல்வர் சண்முகம் புதன்கிழமை திடீர் என சந்தித்தார்.
ஆளுநரை சந்தித்து விட்டு திரும்பிய அவருக்கு திடீரென உடல் நலக்குறைவுஏற்பட்டது. இதையடுத்து அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, கல்வி அமைச்சர் சுப்ரமணியனுடன் தனது வீட்டில் முதல்வர் சண்முகம்நெடுநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது இருவரும்என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.
Comments
Story first published: Thursday, October 4, 2001, 5:30 [IST]