சிவகாசியில் 3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை
மதுரை:
வேலை தேடிச்சென்ற கணவன் 3 மாதங்கள் ஆகியும் கடிதம் போடாததால், சிவகாசி அருகே ஒரு பெண் தனது 3வயது குழந்தையைக் கொன்று தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை அருகே உள்ள சிவகாசியில், வேலைதேடிச் செல்கிறேன் என்று வெளியூர் சென்ற கணவர் 3 மாதங்கள்ஆகியும் மவிைக்குக் கடிதமே போடவில்லையாம்.
மேலும் தனது 2 பெண் குழந்தைகளுடன் அந்தப் பெண் ஏழ்மையில் வாடிவந்திருக்கிறார். இந்நிலையில்மனமுடைந்த அந்தப் பெண் தனது 3 வயதுள்ள இளைய பெண்ணை தூக்கில்போட்டு கொலை செய்திருக்கிறார்.பிறகு தானும் தூக்குப போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மூத்த மகள் அவரது பாட்டியுடன் வீட்டுக்கு வெளியில் தூங்கியதால், அவர் மட்டும் தப்பித்துக் கொண்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்தததும் போலீசார் விரைந்துவந்து, பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.