வேலூரில் அசாம் தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் நகரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 தீவிரவாதிகள்பிடிபட்டனர்.
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. இந்தஅமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் வேலூர் நகரில் உள்ள சத்துவாச்சேரி விடுதிஒன்றில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள விடுதி ஒன்றில் போலீஸார்சோதனை நடத்தினர். அப்போது சம்புபா மட்டாலி, ராணி சம்புபா மட்டாலி, பரத்பிம்பாத், ராஜேந்திர மட்டாலி ஆகிய நான்கு தீவிரவாதிகள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications