For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரவுடிகள் தாக்கி நீதிபதி காயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நுகர்வோர் மன்ற உறுப்பினராக இருந்து வந்த கடலோசை காதர் என்பவரைசில ரவுடிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் உறுப்பினர்-நீதிபதியாகஇருப்பவர் கடலோசை காதர். இவருக்கு வயது 62. தனது கொட்டிவாக்கம்வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை ஆட்டோ ஒன்றில் மயிலாப்பூரில் உள்ள கோர்ட்டுக்குகாதர் போய்க் கொண்டிருந்தார்.

அப்போது அடையாறு சிக்னல் அருகே அவர் வந்தபோது, திடீரென ஒரு கும்பல்அவரது ஆட்டோவை வழிமறித்தது.

அந்த கும்பல் காதரை வெளியே இழுத்து அவரது கையை முறுக்கி, முகத்தில்குத்தியுள்ளனர். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தபொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் ரவுடிகளைப் பிடிக்க முயற்சிசெய்தனர். இதையடுத்து ரவுடிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

கையில் பலத்த காயமடைந்த காதர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அடையாறு போலீஸில் ஒரு புகாரையும் அவர் கொடுத்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X