வாஜ்பாயைச் சந்தித்தார் இங்கிலாந்து பிரதமர்
டெல்லி:
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியா வந்துசேர்ந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காதொடுக்கவுள்ள போர் குறித்து பிரதமர் வாஜ்பாய் மற்றும் பல தலைவர்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்திவருடிகிறார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவுதிரட்ட, அதன் நட்பு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தின் பிரதமர்டோனி பிளேர் ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுபாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை சந்தித்தார்.
பிறகு அங்கிருந்து தனி விமானத்தில் கிளம்பி நள்ளிரவு 11.45 மணிக்கு இந்தியா வந்து சேர்ந்தார். அவரை மத்தியகலாச்சாரத்துறை இணை அமைச்சர் மேனகா காந்தி, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ராப் யங், வெளியுறவுச்செயலாளர் சோகிலா ஐயர் ஆகியோர் வரவேற்றனர். அவர் இங்கு 12 மணி நேரம் தான் இருப்பார். பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்துப் பேசிவருகிறார்.
அவர் கூறுகையில், சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக போராட இந்தியா ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மேலும்காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டத்தின் மீது சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம்தெரிவிக்கிறேன் என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையில், வெளியுறவு மற்றும ராணுவ அமைச்சர் ஜஷ்வந்த் சிங், தேசிய பாதுகாப்புக் குழுஆஅலாசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் வெளியுறவுச் செயலாளர் சோகிலா ஐயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தவுடன், உள்துறை அமைச்சர் அத்வானியையும் பிளேர் சந்தித்துப் பேசுகிறார்.அப்போது திட்டக்கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த், மற்றும் ஜஷ்வந்த் சிங், பிரஜேஷ் மிஸ்ரா மற்றும சோகிலாஐயர் ஆகியோரும் உடன் இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications