சென்னையில் மீண்டும் விஷச்சாராயம் - 11 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் விஷச் சாராயம் அருந்திய 11 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
புழல் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.வெள்ளிக்கிழமை இரவு இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கோமளம் என்ற சாராயம்விற்கும் பெண்மணியிடம் சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர். அருந்தியவுடன்அவர்களில் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 11 பேர் பலியாயினர்.மேலும் 11பேர்ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
புழல் பகுதி திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இதே மாவட்டத்தில்தான்சமீபத்தில் 10க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications