விஷச்சாராயம் அருந்திய 22 பேர் துடிதுடித்து சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்களின்எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

புழல் அருகே உள்ள கோட்டூர் என்ற இடத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை இரவு)இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.

மிகவும் உடல் மோசமான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 30 பேர்சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாகஉள்ளது.

மிதைல் ஆல்கஹாலுடன் வேறு ஏதோ ஒரு மருந்தைக் கலந்து அவர்கள் அருந்தியதால்,இவர்கள் அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குக் கண் பார்வை நன்றாகத் தெரிந்த போதிலும், தற்போது அவர்களுக்குமூச்சுத் திணறல் பெரிதும் ஏற்பட்டுள்ளது. நரம்புகளும் வெகுவாகத்தளர்ச்சியடைந்துள்ளன என்று சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து இந்த விஷ சாராய விற்பனையில் தொடர்புடைய கஸ்தூரி மற்றும்அவரது மகன் பார்த்திபன் ஆகியோரை பொதுமக்கள் கூடி நின்று தர்ம அடிகொடுத்தனர். அடி தாங்க முடியாத அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

முதலில் 12 பேர் இறந்தனர். தொடர்ந்து 10 பேர் இறந்தனர். மேலும் பலரின் நிலைமைமோசமாகவே உள்ளது.

நிச்சயதார்தத்துக்கு வந்தவர்கள் பலி:

புழல் பகுதியில் உள்ள கோட்டூர் காலனியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிகழ்ச்சி வந்த பலரும் இரவில் சாராயம்குடித்துள்ளனர். இறந்தவர்களில் பவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம்தான் விஷச் சாராயம் அருந்தி 10 பேர்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+