For Daily Alerts
Just In
கின்சலொய் விருது பெறும் முதல் இந்திய போர் விமானி
பெங்களூர்:
சிறந்த சோதனை விமான ஓட்டிக்கான (டெஸ்ட் பைலட்) கின்சலோய் விருது முதன் முதலாக ஒரு இந்தியருக்குவழங்கப்பட்டுள்ளது.
செசைட்டி ஆப் எக்ஸ்பெரிமென்டல் டெஸ்ட் பைலட்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் இந்த விருதை வழங்கியுள்ளது.
உலகத்தில் உள்ள அனைத்து விமானச் சோதனை மையங்களில் இருந்தும் சிறந்த விமானிகளின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டு இந்த நிறுவனத்துக்கு அனுப்பப்படும்.
ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனம் சிறந்த விமானியைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விருதை வழங்கும்.
இந்த ஆண்டுக்கான விருதை தேசிய விமானப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் ராஜிவ் கோத்யால்பெறுகிறார். இந்த விருதை பெரும் முதல் இந்தியர் ராஜிவ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போர் விமானங்களைஇயக்குவதில் வல்லவராவார்.
பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சியில் இவர் சோதனை விமானியாக உள்ளார்.
Comments
Story first published: Saturday, October 6, 2001, 5:30 [IST]