For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திராவுக்கு தெற்கே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வலுவாக மையம்கொண்டுள்ளதால் வட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அடுத்த இரண்டுநாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில்வெள்ளிக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் இரு நகரங்களின்இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகர சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. வாகனப் போக்குவரத்துபெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில்மூழ்கியுள்ளன. பல வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் இருக்கிறது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்த நிலையில் ஆந்திராவின் தெற்கே வங்கக் கடலில் புயல் சின்னம் வலுவாகஅமைந்துள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்றுநுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X