For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஜெ. மீது மக்கள் அனுதாபம்- வாசன்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டுள்ளது என்றுத.மா.கா. தலைவர் வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் மதுரையில் அதிமுக-தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப்பிரச்சாரம் செய்தார்.

மதுரை மேயர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ மற்றும் தமாகா, அதிமுக மற்றும்கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போதுஅவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இந்தக் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எங்கள் கட்சிக்கு 25 சதவீத இடங்களை அதிமுக அளித்துள்ளதுகுறித்து நாங்கள் திருப்தியடைகிறோம்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது மக்கள் மத்தியில் அனுதாபம்ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சியும் நல்லாட்சியாக அமையவேண்டும் என்று எண்ணி எனது தந்தையும் எங்கள் தலைவருமான ஐயாமூப்பனார் காட்டிய வழியில் எங்கள் கட்சியை வழிநடத்தி வருகிறோம்.

சென்னையில் நடந்துள்ள விஷச்சாராண மரணங்கள் வருத்தத்தை அளிக்கிறது. மேலும் அதிமுக அமைச்சர்கள்நல்லமுறையில் செயல்படுகிறார்கள். அதிமுக அரசு கடந்த 4 மாதங்களாக நல்ல பல திட்டங்களைத் தீட்டிவருகிறது.

பாண்டிச்சேரியில் எங்களுக்கம் காங்கிரசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தொடர்கிறது என்றார் வாசன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X