பின் லேடன் உயிரோடுதான் உள்ளார் - தலிபான் தூதர்
இஸ்லாமாபாத்:
பின் லேடன் உயிருடன் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர்அப்துல் சலாம் சயீப் கூறினார்.
எனவே அவருக்கு அடைக்கலம் கொடுத்துவரும் ஆப்கானிஸ்தான் அவரை உடனடியாக அமெரிக்காவிடம்ஒப்படைக்க வேண்டும் என்று கோரியது.
அவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தான் இருந்துவருகிறார். ஆனால் அமெரிக்காஆதாரங்களைக் காட்டினாலும் பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என்று ஆப்கானை ஆளும்தலிபான்கள் கூறிவிட்டனர்.
இதனால் தற்போது ஆப்கான் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் போன்ற நாடுகளின் கூட்டுப்படைகள் விமானத்தாக்குதல் நடத்திவருகின்றன. பின்லேடனையும், அவரை ஒப்படைக்க மறுக்கும் தலிபான் தலைவர் முல்லாஉமரையும், உயிருடனோ பிணமாகவோ பிடிக்க அமெரிக்கப்படை முயன்று வருகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் முல்லா உமரின் வீட்டுக் காம்பவுண்டு மீது குண்டுவீசப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் முல்லா உமர் பலியாகியிருக்கலாம் என்று செய்திகள் பரவியது. இதை மறுத்துஅப்துல் சலாம் சயீப் இன்று சி.என்.என். டிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,
பின் லேடன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் ஆப்கானிஸ்தானில் மக்கள் யாரும் எளிதில் அடையமுடியாதஇடத்தில் பத்திரமாக இருக்கிறார்.
அமெரிக்கா வீசிய குண்டு ஒன்று காண்டகர் நகரில் உள்ள முல்லா உமரின் வீட்டருகே விழுந்தது. ஆனால்அந்நேரம் தலிபான் தலைவர் முல்லா உமர் அந்த இடத்தில் இல்லை. அவரும் பத்திரமாக ஆப்கானிஸ்தானில் தான்இருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications