சாராய சாவுகளுக்கு மெத்தனால் காரணம் அல்ல, மெத்தனம் தான் காரணம்
சென்னை:
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாகவே சென்னை அருகே விஷச் சாராயத்திற்கு 36 பேர் பலியாகியுள்ளனர் என்று தமிழகபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விஷச்சாராய சம்பவம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், மெத்தனால் என்ற வேதிப் பொருள்தான் இந்த துயரச்சம்பவத்திற்குக் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை விட விஷத்தன்மை கொண்ட அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் இந்தசம்பவத்திற்கு அடிப்படைக் காரணம்.
கள்ளச்சாராய புழக்கத்தை வளர விட்டு விட்டு இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடந்த பின்னர் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில்என்ன பயன் உள்ளது?. கள்ளச்சாராய வியாபாரிகளை ஊக்குவித்து அவர்களை சாராயம் காய்ச்சச் சொல்லி தூண்டுவதேகாவல்துறையினர்தான்.
அவர்களைத் தண்டிக்க மேலிட அதிகாரிகள் மெத்தனம் காட்டியதே இதுபோன்ற சம்பவத்திற்குக் காரணம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications