டெல்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதையடுத்து, இந்தியாவில் பாதுகாப்புநடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை)நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பிரதமர் வாஜ்பாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தத் தாக்குதல் குறித்துப் பேசினார் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ்.

மேலும், நேற்று இரவு பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரெஞ்ச் அதிபர் சிராக்ஆகியோரும் வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினர். ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியாஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் வாஜ்பாயைக் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, வாஜ்பாய்தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி விவாதிக்கிறது.

எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளைத் தயார் நிலையில் வைப்பது குறித்தும், இந்தியா முழுவதும்பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று மாலை மத்திய அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூடி விவாதித்தது. வாஜ்பாய் தலைமையில்கூடிய இந்தக் குழு, இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல்நடத்தியது குறித்தும் விவாதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+