ஆப்கானிஸ்தான் எல்லையை மூடியது சீனா
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கத் தொடங்கியதை அடுத்து, தன் நாட்டின் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை மூடிவிட்டது சீனா.
போர் வலுத்து வருவதை அடுத்து, சீனாவில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் மூடுவதற்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை ராணுவப் படையைச் சேர்ந்தவீரர்கள் இங்கு தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவே இருக்கும் பாகிஸ்தான் எல்லை திறந்தே இருக்கும்என்றும் சீன அரசு கூறியுள்ளது.
ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானிலிருந்து சீனாவுக்குத்தான் தப்பிச் சென்றுள்ளதாக இந்த மாதத் துவக்கத்தில்சில மேற்கத்திய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியை சீனா வன்மையாக மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications