நிலக்கரி ஊழல்: தனி நீதிமன்றத்தில் ஆஜராக ஜெ. மறுப்பு
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக வரும் 10ம் தேதி தனி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று முன்னாள்முதல்வர் ஜெயலலிதா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி செய்ததில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.6.5 கோடி ஊழல் நடந்ததாக ஜெயலலிதா,அப்போதைய அமைச்சர் கண்ணப்பன் உள்பட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
குற்றவியல் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, நீதிபதியின்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஜெயலலிதா, கண்ணப்பன் தவிர மற்ற 8 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில்அளித்தனர். இன்று கண்ணப்பனும் பதில் அளிக்கவுள்ளார். நாளை ஜெயலலிதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் தனி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில்ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
என்னுடைய சொந்தப் பிரச்சினைகள் காரணமாகவும், உள்ளாட்சித் தேர்தல் காரணமாகவும் என்னால் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. எனவே அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், நான் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாலும், என்னுடைய பாதுகாப்பை முன்னிட்டும் அன்று நான்ஆஜராக முடியாது.
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமலேயே உச்ச நீதிமன்றம்தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே என்னுடைய வழக்கறிஞர் மூலமாகவே என்னுடைய பதில்கள்அளிக்கப்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications