ஈரோட்டில் மனைவியை விபசாரத்திற்கு ஈடுபடுத்தியவர் கைது
ஈரோடு:
ஈரோடு அருகே குமாரபாளையத்தில் தன் மனைவியை மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியவர், அவருடையநண்பருடன் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு நாடார்மேட்டைச் சேர்ந்தவர் சங்கர் என்ற விஜயகுமார் (40). இவர் தன்னுடைய குடும்பத்துடன்குமாரபாளையத்தில் வசித்து வருகிறார்.
தன்னுடைய மனைவியை மிரட்டி, தன் வீட்டிலேயே அவரை விபசாரத் தொழில் ஈடுபடுத்தி வந்தார் சங்கர். தன்மனைவி தவிர, வேறு சில இளம் பெண்களையும் இரவு நேரத்தில் அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்திவிட்டுகாலையில் அவர்களை சங்கர் அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபசாரத் தொழிலுக்கு புரோக்கராக சங்கரின் நண்பர் மாரியப்பன் (45) வேலை பார்த்ததாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் குமாரபாளையம் போலீசாருக்குக் கிடைத்ததையடுத்து, அவர்கள் உடனடியாக சங்கர் வீட்டுக்குச்சென்று சோதனையிட்டனர்.
அங்கு விபசாரத் தொழில் நடப்பது உறுதியாகவே, சங்கர் மற்றும் மாரியப்பனை போலீசார் உடனடியாகக் கைதுசெய்தனர். தகவல் அறிந்ததும், அந்த வீட்டில் இருந்த விபசாரிகள் ஓடி விட்டனர்.
பிறகு சங்ககிரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்ட சங்கரையும் மாரியப்பனையும் 15 நாள் காவலில் வைக்கமாஜிஸ்திரேட் குமாரசாமி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications