வாழ்க சிதம்பரத்தின் புதிய அணி - கருணாநிதி
சென்னை:
"எனது தலைமையிலும், ஜெயலலிதா தலைமையிலும் முன்பு கூட்டணியில் இருந்த ப.சிதம்பரம் தலைமையில்இப்போது ஒரு அணி உருவாகியுள்ளது. அந்த அணி வாழ்க" என்று திமுக தலைவர் கருணாநதி கூறியுள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கும், ஜெயலலிதாவுக்கும் மாற்றாகஒரு தலைவர் தேவை என்று ப.சிதம்பரம் பேசியுள்ளார். தன் மனதில் தோன்றியதை அவர் பேசியுள்ளார்.
எனது தலைமையிலான அணியிலும், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியிலும் செயல்பட்ட அவர், இப்போதுஅவரது தலைமையிலான அணிக்குத் தலைமை தாங்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இப்போதாவது சிதம்பரத்தை தலைவராக அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படுகிறேன்.அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் மகிழ்ச்சியே.
அவர் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் அந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவேவாழ்த்துத் தெரிவித்துள்ளேன். வாழ்க சிதம்பரம் அணி என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications